Monday, April 16, 2012

பேஸ்புக்கில் தொல்லை கொடுக்கும் Photo Tag ஐ ஆஃப் செய்வது எப்படி


பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும். Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய் “என்னை Tag பண்ணாதே” என்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்.
இவற்றிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, Photo Tag ஐ ஆஃப் செய்துவிடுவதுதான். பேஸ்புக்கில் Photo Tag செட்டிங்கை மாற்றுவதன்மூலம் நீங்கள் அனுமதியளித்த பின்னரே ஒருவர் உங்களை Tag பண்ணும்படி செய்யலாம். அதாவது ப்ளாக்கில் கமெண்ட் மாடரேஷன் வைப்பது போல :)


இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள். அதில் Privacy Settings செல்லுங்கள்
அங்கு Timeline and Tagging என்பதற்கு அருகில் உள்ள Edit Setting என்பதை கிளிக் பண்ணுங்கள்

கிளிக் பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ ஒன்று வரும். அதில் Review posts friends tag you in before they appear on your timeline என்பதை On செய்யுங்கள்.


On பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ தோன்றும். அதில் கீழே உள்ள படத்தில் காட்டியது போன்று Review Control ஐ Enable செய்துவிட்டால் சரி


இப்போது செட்டிங்ஸ் முழுமையடைந்துள்ளது. இதன் பின்னர் உங்களை யாராவது Tag பண்ணினால் அவை உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும். நீங்கள் அனுமதி அளித்த பின்னரே உங்களை Tag செய்யும். அனுமதிக்காக காத்திருக்கும் Tags ஐ உங்கள் ப்ரோபைலில் Activity Log என்ற பகுதியில் காணலாம்.


இந்த பதிவு உங்களுக்கு பிரயோசனமாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

For Further Reading,
facebook, Online Security

Post Comment

4 comments:

சுதா SJ on April 17, 2012 at 2:48 AM said...

சூப்பர் தகவல் மது.... இந்த தொல்லை எனக்கும் இருக்கு.... இனி தை நாமளும் சரி பண்ணிருவம் இல்ல :))))

ஜெயந்த் கிருஷ்ணா on April 17, 2012 at 2:08 PM said...

தகவலுக்கு ரொம்ப நன்றிங்க.. டேக் பன்னாதீங்கடான்னு எப்படிடா நேரடியா சொல்றதுன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்..

Tamilmovieszone on April 17, 2012 at 8:42 PM said...

rompa nala ethirpartha visayam
super

Jaleela Kamal on April 18, 2012 at 12:14 PM said...

பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு மிக்க நன்றி